×

தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த 6ம் தேதியில் இருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் மே 15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் வெயில் நிலவுகிறது. மே 10, 11-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Tirunelveli ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Katri ,
× RELATED தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4...